search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொது தொழிலாளர் நல அமைப்பு"

    • மாணவர்களை கண்காணிக்க போதிய நடத்துனர் இல்லாமல் இருப்பது.
    • உயர்நீதிமன்ற உத்தரவை முறையாக அமல்படுத்தவும் மாவட்ட நிர்வாகம் உடனடியாக உரிய தீர்வு காண வேண்டும்.

    திருப்பூர் :

    திருப்பூர் கலெக்டர் வினீத்திடம், அனைத்து பொது தொழிலாளர் நல அமைப்பின் பொதுச் செயலாளர் ஈ.பி.சரவணன் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:- திருப்பூர் மாவட்ட பகுதிகளிலுள்ள பள்ளி, கல்லூரிவாகனங்களில், தமிழ்நாடு மோட்டார் வாகன(பள்ளி வாகனங்கள் முறைமைபடுத்துதல் மற்றும் கட்டுப்பாடு) சிறப்பு விதிகள் 2012, விதிமுறைகள் உரியமுறையில் கடைபிடிக்கப்படுகிறதா? என்பதை கண்காணிக்க சிறப்பு குழுஅமைக்க மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் உரிய தீர்வு காண வேண்டும்.

    கல்வி வாகனங்களில் அதிக அளவில் மாணவர்களை ஏற்றுவது, வாகனங்களை முறையாக பராமரிக்காமல் இருப்பது, வாகனங்களில் பள்ளியின் பெயர் குறிப்பிடாமல் இருப்பது, மாணவர்களை கண்காணிக்க போதிய நடத்துனர் இல்லாமல் இருப்பது போன்ற பல்வேறு நடவடிக்கைகளில் கல்வி நிறுவனங்கள் ஈடுபடுகின்றன. தனியார் பள்ளிகளில் முறையாக வாகனங்களை பராமரிக்காமல் இருப்பது போன்ற நடைமுறைகள் தற்போதும் இருந்து வருகிறது. எனவே, பள்ளி நிறுவன வாகனங்கள் விதிகளை முறையாக பின்பற்றவும் உயர்நீதிமன்ற உத்தரவை முறையாக அமல்படுத்தவும் மாவட்ட நிர்வாகம் உடனடியாக உரிய தீர்வு காண வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சுற்றுப்பகுதி கிராமங்களில் தங்கியுள்ள தொழிலாளர்கள், அரசு பஸ்களில் பணிக்கு வந்து செல்கின்றனர்.
    • பள்ளி, கல்லுாரி மாணவர்களும், பனியன், கட்டுமான தொழிலாளர்களும் மிகவும் சிரமப்படுகின்றனர்.

    திருப்பூர்:

    அனைத்து பொது தொழிலாளர் நல அமைப்பு பொதுச்செயலாளர் சரவணன், கலெக்டர் வினீத்திடம் அளித்த மனுவில் கூறி இருப்பதாவது:-

    திருப்பூர் பின்னலாடை உற்பத்தி நிறுவனங்களில், வெளி மாவட்டம், வெளி மாநில தொழிலாளர் லட்சக்கணக்கானோர் பணிபுரிகின்றனர். சுற்றுப்பகுதி கிராமங்களில் தங்கியுள்ள தொழிலாளர்கள், அரசு பஸ்களில் பணிக்கு வந்து செல்கின்றனர். திருப்பூரிலி ருந்து பெருமாநல்லூர்், பாண்டியன் நகர், நம்பியூர், ஈட்டி வீரம்பாளையம், அப்பியாபாளையம் உட்பட புறநகர் பகுதிகளுக்கு இயக்கப்பட்ட பல அரசு பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், பள்ளி, கல்லுாரி மாணவர்களும், பனியன், கட்டுமான தொழிலாளர்களும் மிகவும் சிரமப்படுகின்றனர்.

    எனவே, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து, திருப்பூரிலிருந்து சுற்றுப்பகுதிகளுக்கு சென்றுகொண்டிருந்த அனைத்து டவுன் பஸ்களையும் மீண்டும் இயக்க வேண்டும். இவ்வாறு, அதில் அவர் கூறியுள்ளார்.

    • திருமுருகன் பூண்டி சம்பவங்கள் போல் மீண்டும் நடைபெறாமல்தடுக்க தகுந்த நடவடிக்கை செய்ய வேண்டும்.
    • மாணவ-மாணவிகளின் பாதுகாப்பை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்.

    திருப்பூர் :

    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து பொதுதொழிலாளர் நல அமைப்பின் பொது செயலாளர் ஈ.பி.அ.சரவணன் மனு அளித்தார்.அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

    திருப்பூர் அவினாசி சாலையிலுள்ள திருமுருகன் பூண்டிபகுதியிலுள்ள விவேகானந்தா சேவாலயத்தில் பரிதாபமாக 3பிஞ்சு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் மிகுந்த வேதனைஅளிக்கிறது.

    மேலும் இது போன்ற சம்பவங்களை தடுக்கும் வகையில்திருப்பூர் பகுதி முழுவதும் இயங்கி வரும் பள்ளி மாணவ -மாணவிகள்தங்கும் விடுதிகளை முறையாக ஆய்வு செய்ய வேண்டும்.

    திருமுருகன் பூண்டி சம்பவங்கள் போல் மீண்டும் நடைபெறாமல்தடுக்க தகுந்த நடவடிக்கை எடுத்து பள்ளி மாணவ-மாணவிகளின் பாதுகாப்பை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    • வீடு திட்டத்தின்கீழ் மாவட்ட நிர்வாகத்தின் பரிந்துரையின் பேரில் பயனாளிகளுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன.
    • இடைத்தரகர்களாக செயல்படும் பலரும் வீடு வாங்கித்தருவதாகக் கூறி பொதுமக்களிடம் பணம் வசூலித்து மோசடி செய்வது தொடர்ந்து வருகிறது.

    திருப்பூர் :

    அனைத்து பொது தொழிலாளர் நல அமைப்பு சார்பில் அதன்பொது செயலாளர் ஈ.பி.அ.சரவணன் தமிழக முதல்-அமைச்சருக்கு அனுப்பிய மனுவில் கூறியிருப்பதாவது:-

    திருப்பூர் உள்பட புறநகரங்களில் சமீப காலமாக குடிசை மாற்றுவாரியத்தின் மூலம் வீடு வாங்கி தருவதாக பல கும்பல்கள் களத்தில் இறங்கி இருப்பது தெரியவந்துள்ளது. அனைவருக்கும் வீடுதிட்டத்தின்கீழ் மாவட்ட நிர்வாகத்தின் பரிந்துரையின் பேரில் பயனாளிகளுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. இதற்கிடையே, இடைத்தரகர்களாகச் செயல்படும் பலரும் வீடு வாங்கித்தருவதாகக் கூறி பொதுமக்களிடம் பணம் வசூலித்து மோசடிசெய்வது தொடர்ந்து வருகிறது. பல பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் இதுபோல் ஏமாற்றப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள்மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.

    தமிழ்நாடு குடிசைமாற்று வாரியத்தில் வீடுகள் பெற்றுத் தருவதாக பணம் கேட்டு ஏமாற்றும் இடைத்தரகர்களை நம்பி ஏமாறவேண்டாமென பொது மக்களிடம் தொடர்ந்து போதிய விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும். குடிசை மாற்று வாரியத்தில்வீடு வாங்கித் தருவதாகக் கூறி பணம் வசூலித்து மோசடி செய்தவர்கள் மீது எந்தவித பாரபட்சமும் இன்றி உரிய நடவடிக்கைஎடுக்க வேண்டுமெனவும், அனைத்து பொது தொழிலாளர் நலஅமைப்பு சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

    இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளது. 

    • பெருந்துறை மற்றும் சோமனூரில் உள்ள கோட்ட பொறியாளர்கள் கட்டுப்பாட்டில் அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.
    • திருப்பூர் மின் பகிர்மான வட்டத்தில் இணைக்க வேண்டும்.

    திருப்பூர்:

    குன்னத்தூர், மங்கலம் மின் பகிர்மான கோட்ட பகுதிகளை திருப்பூரில் இணைக்க கோரி அனைத்து பொது தொழிலாளர் நல அமைப்பு மனு.

    கோவை, ஈரோடு மாவட்டங்களிலுள்ள குன்னத்தூர், மங்கலம் மின் பகிர்மான கோட்ட பகுதிகளை திருப்பூர் மின் பகிர்மான வட்டத்தில் இணைக்க உரிய தீர்வுகாண கோரி அனைத்து பொது தொழிலாளர் நல அமைப்பு சார்பில் அதன் பொது செயலாளர் ஈ.பி.அ.சரவணன் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    திருப்பூர் மாவட்டம் மங்கலம் மற்றும் குன்னத்தூர் உள்ளிட்ட பகுதியிலுள்ள பத்திர பதிவு, வருவாய் துறை, காவல்துறை, உள்ளாட்சி துறை ,கிராம பஞ்சாயத்துக்கள் உட்பட அனைத்து அரசு அலுவலகங்களும் கோவை மற்றும் ஈரோடு மாவட்டத்தில் இருந்து பிரித்து திருப்பூர் மாவட்டத்தில் இணைக்கப்பட்ட நிலையில் கடந்த 2011 ல் இருந்து தற்போது வரை மங்கலம் மற்றும் குன்னத்தூர் உப கோட்டங்களில் உள்ள மின்சார வாரிய அலுவலகங்கள் மற்றும் துணை மின் நிலையங்கள் மட்டும் கோவை மற்றும் ஈரோடு மாவட்டங்களிலுள்ள ஈரோடு மற்றும் கோவை மின் பகிர்மான வட்டங்களில் இருந்து வருகிறது.

    திருப்பூர் மாவட்டத்துக்கு உட்பட்ட மங்கலம் சுற்றுப்பகுதிகள் கோவை தெற்கு மின்பகிர்மானத்துடனும், குன்னத்தூர் சுற்றுப்பகுதிகள் ஈரோடு மின்பகிர்மானத்துடனும் இணைக்கப்பட்டுள்ளது. பெருந்துறை மற்றும் சோமனூரில் உள்ள கோட்ட பொறியாளர்கள் கட்டுப்பாட்டில் அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. மாவட்டம் உருவாகி 10 ஆண்டுகளுக்கு மேலாகியும் கடந்த ஆட்சியில் எங்களுடைய தொழிற்சங்கம் சார்பில் இது தொட‌ர்பாக பல முறை புகார் மனு அளிக்கப்பட்ட போதும் எவ்வித முறையான நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை.

    குறிப்பாக விவசாயிகளுக்கு மின்சார இணைப்பு பெறுவது, விவசாயிகளுக்கான மின்சேவைகளிலும் சுணக்கம் ஏற்படுகிறது. மின் இணைப்புகளை முறைகேடாக பயன்படுத்துவது குறித்து புகார் அளித்தாலும் நடவடிக்கை இருப்பதில்லை என்ற குற்றச்சாட்டு பொது மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

    இப்பகுதிகளிலுள்ள மக்களுக்கு மின்தடை அறிவிப்புகள் குறித்த தகவல்கள், மற்றும் சோமனூர் கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் மாதாந்திர மின்நுகர்வோர் குறைகேட்பு கூட்டம் நடப்பது குறித்த முன்னறிவிப்பு செய்வதே இல்லை. எனவே தாங்கள் இதுகுறித்து உரிய விசாரணை மேற்கொண்டு திருப்பூர் மாவட்டம் மங்கலம் மற்றும் குன்னத்தூர் உபகோட்டங்களில் உள்ள மின்வாரிய பிரிவு அலுவலகங்கள் மற்றும் துணை மின் நிலையங்களை கோவை, ஈரோடு மாவட்டத்திலுள்ள ஈரோடு மற்றும் கோவை மின் பகிர்மான வட்டத்தில் இருந்து பிரித்து திருப்பூர் மாவட்டம் திருப்பூர் மின் பகிர்மான வட்டத்தில் இணைக்க வேண்டும் என்று அனைத்து பொது தொழிலாளர் நல அமைப்பு சார்பில் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    ×